திங்கள், 30 நவம்பர், 2009

ஓம் எனும் ஆதி வார்த்தை!



ஓமெனும் ஒருவனே யாமென அறிந்தால்
தானெனச் சுருங்குமோ இருதயம்

இருதயத் தாமரை வீசும் ஓமெனும்
அருள்மணம் மூச்சினில் வாசி

ஓமெனும் அல்லா நிர்க்குணப் பிரம்மமே
நானென வந்த சகுணம்

சகுணம் அகமாய் நிர்க்குணம் ஓமாய்
குருமெய்ப் போதமாய் நீ

நீயெனும் உருவில் ஓமெனும் அருவம்
ஓங்கிடும் வழியே நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக